கேரளாவில் கொச்சி மெட்ரோ ரெயிலை துவக்கிவைக்க மோடி வருகிறார். கேரள எதிர்கட்சி தலைவர், ரமேஷ் சென்னிதாலாவையும், இந்த திட்டத்தை செய்து முடித்த இதன் முதன்மை செயலாளர் ஈ.ஶ்ரீதரன்,மற்றும் லோக்கல் MLA மூவரையும் விடுத்து, பிரதமர் அலுவலகம் VIP பட்டியலை தயார் செய்தது. உடனே தோழர். பினராயி விஜயன் -இது தவறு இவர்களை விழாவுக்கு அழைப்பது மட்டுமல்ல,மேடையில் அமர்வதற்கும் அனுமதி கோரி போராட்டத்தை துவக்கினார். பிரதமருக்கு ஒரு ஸ்ட்ராங் கடிதம். இப்போது பிரதமர் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.எதிர்கட்சி தலைவர் காங்கிரஸ்காரர். ஶ்ரீதரன் இந்தியாவின் "மெட்ரோ மேன்'என அழைக்கப்படும் அதிகாரி. இதுதான் கம்யூனிஸ்ட்கள் உருவாக்கும் அரசியல் மரபுகள்/நாகரீகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக