<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

"""தமிழ் நாடு ""

"""தமிழ் நாடு "" என பெயர் சூட்ட தீர்மானம் தயாரித்து தாக்கல் செய்தவர் தோழர் பிராமமூர்த்தி.
அவர் வெளிநாடு சென்றிருந்த போது அவையில் அதனை முன்மொழிந்து பேசியவர் தோழர் புபேஷ் குப்தா -
அதன் பின் வழிமொழிந்தவர் சி.என்.அண்ணாத்துரை,
மேலும் தமிழ்நாடு என பெயர் மாற்றம் கோரி காமராஜ் ஆட்சியில் விருதுநகரில் 73 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.
உண்ணாவிரத பந்தலை பிரித்து சேதப்படுத்தியவர்கள் காங்கிரசார் .
போராட்டத்திற்கு இறுதி வரை பாதுகாப்பு தந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள்'-
சங்கரலிங்கனார் தனது மறைவுக்குப் பின் அவரது உடலை - கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படைத்திட உயில் எழுதினார்.
அதன்படி தோழர்கள் KTK தங்கமணியும், KB.ஜானகி அம்மாவும். அன்னாரது உடலை பெற்று 1000க்கணக்கானோருடன் இறுதி ஊர்வலம் சென்று தகனம் செய்தார்.
சுதந்திர போராட்டத்தியாகி -
"" தமிழ்நாடு"" பெயர் வைத்திட போராடி உயிர் நீத்து -
இறுதியில் கம்யூனிஸ்டாக மறைந்தார்.
லால் சலாம் ! தியாகி தோழர்.
சங்கரலிங்கனாருக்கு !
-இது தான் 50 வருட கொண்டாட்டத்தில் சொல்ல பட வேண்டிய உண்மைகள்....
""தமிழ்நாடு ""பெயர் வர முக்கிய காரணம்
கம்யூனிஸ்டுகள்....
சரித்திரம் சரியாக இருக்க வேண்டும்...
Ram Subbu பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக