<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

ஞாயிறு, 18 ஜூன், 2017

சிபிஎம் அலுவலகம் மீது குண்டுவீச்சு: கோபாவேச ஆர்ப்பாட்டம்



 தீக்கதிர் செய்தி

 திருப்பூர், ஜூன் 17 -

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீதுபெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளைக் கைது செய்யவும், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் பல்வேறு இடங்களில் கோபாவேச ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் காந்தி சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். இதில்திமுக மாநகரச் செயலாளர் மேங்கோ பழனிசாமி, மனோகர் பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.காளியப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன், காங்கிரஸ் வட்டார தலைவர் வெள்ளியங்கிரி உள்ளிட்டோர் பேசினர்.திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி தலைமை வகித்தார்.
இதில் மார்க்சிஸ்ட் கட்சியன் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.ஆர்.நடராஜன், திமுக சார்பில் காந்தி, தமாகா சார்பில் செழியன், காங்கிரஸ் சார்பில் ராமசாமி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.வேலம்பாளையம் நகரக் குழு சார்பில் அ.புதூர் சிக்னல் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரக்குழு உறுப்பினர் வி.பி.சாமிநாதன் தலைமைவகித்தார். இதில் நகரச் செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி.ராஜேந்திரன், திமுகசார்பில் செயலாளர் கொ.ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடராஜ், தேமுதிக சார்பில்செல்வகுமார், காங்கிரஸ் சார்பில் சிவசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
தாராபுரத்தில் அண்ணாசிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நலஅமைப்பின் நிர்வாகி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னுச்சாமி, மேகவர்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அனைத்து பகுதிகளிலிருந்து பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை ஒன்றிய செயலாளர் ஏ.துரைசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம், சிபிஐஆனைமலை ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.சுந்தரசாமி, சிஐடியு மாநில துணை செயலாளர் எம்.கனகராஜ், விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.கே.பட்டீஸ்வரமூர்த்தி, வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பி.கருத்தோவியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆனைமலை ஒன்றிய செயலாளர் சி.கம்பர், அ.அப்பன்குமார், தொழிலாளர்கள் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் ப.சந்திரசேகர், க.தர்மராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் த.தமிழ்,தமுமுக கோவை தெற்கு மாவட்ட துணை செயலாளர் முகமது மைதீன், ஆனைமலை நகர செயலாளர் சாகுல் அமீது, இந்திய தேசிய காங்கிரஸ் நகர செயலாளர் ப.நஜுமுதியன், மனிதநேய மக்கள் கட்சியின் ஆனைமலை நகர செயலாளர் சர்தார் உசேன் உள்ளிட்ட பங்கேற்று கண்டன உரையாற்றினர். இதில் 100க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், நீலகிரி மாவட்டம், கூடலூர் அம்பலமூலா பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யோகண்னா தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் வி.டி.ரவீந்திரன் கண்டன உரையாற்றினார். சிஐடியு தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.கே முகுந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும், எருமாடு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் இடைகமிட்டிஉறுப்பினர் திலிப் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் அமீது மாஸ்டர் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக