சமூக அடுக்குகளிலும் பொருளாதார அடுக்குகளிலும், அடிமூட்டையாய் இருக்கும் எமது துப்பரவு தொழிலாளர்கள். நமது சிங்கார சென்னையில் இவர்கள் அனைவரும் "செங்கொடி சங்க'உறுப்பினர்கள் .சங்க பெயரே அப்படி தான் உள்ளது. சுமார் 15,000பேர் தினகூலிகள்,தற்காலிக i- அத்தகூலிகள். எமது செங்கொடி சங்கம் கடந்த சில ஆண்டுகளாக இவர்களை காப்பாற்ற களமிறங்கியது. வேலைநிறுத்தம், மறியல், தர்ணா, பெரும்திரள் முறையீடு என அனைத்து விதமான போராட்டங்களையும் நடத்தியது்.2013-மாநகராட்சி தீர்மானம்.கடந்த பிப்ரவரி போராட்டத்தின் போது பணிவரன்முறை செய்வதாக அரசு எழுத்துபூர்வ ஒப்பந்தம். ஆனால் எதையும் அமல்படுத்த வில்லை.இதற்கிடையில் 15 தொழிலாளர்கள் இறந்து விட்டனர்.
ஆகவே மீண்டும் ஜுன் 14 அன்று போராட்டம் துவங்கியது.சட்டசபை வேறு கூடிவிட்டது. இதற்கு தான் சமயம் பார்த்து கொண்டு இருந்தோம். இரவு பகலாக கஞ்சி இல்லாமல் "காத்திருக்கும்"போர் .ரிப்பன் மாளிகை யில் உள்ளிருப்பு போராட்டம். நேற்று நள்ளிரவு வெற்றியோடு நிறைவடைந்து.NMR தொழிலாளர்கள் 908 பேர் நிரந்தரம் பெற்றனர். இந்த 'நிரந்தரம்' வார்த்தையாக வாசித்து கடந்து விட கூடாது. அது அவர்களது ஜீவன், இதுகால் ஒட்டி கொண்டு இருந்த அவமானம் அழிக்க பட்டது என அர்த்தம். மீதியுள்ள அத்தகூலிகளாக ரூ.100க்கும், ரூ.200க்கும் கூலிஅடிமைகளாக ஊர் மவுசு பேசும்"ஒப்பந்தக்கார்"களிடமிருந்தும் விடுதலை. கூலி ரூ.348 முதல் 500வரை மாநகராட்சியே நேரடியாக வழங்க ஏற்பாடாகியுள்ளது.
இதற்கு தலைமை தாங்கி- அவர்களில் ஒருவராய் ஆகிப்போன தோழர். எல்.சுந்தர் ராஜன். இப்ப இவர்தான் சிபிஎம் வ.சென்னை மாவட்ட செயலாளர். சிஐடியூ-வில் இவரது களம் இந்த பாவபட்ட கூலிகளே. இவரோடு தோழர்கள். சீனிவாசலு,டி.ராஜன், ஜி.முனுசாமி,வி.சரவணன் என இந்த சிங்காரவேலரின் வாரிசு பட்டியல் நீளும். இவர்களை எப்படி பாராட்டுவது-வார்த்தைகள் இல்லை என்னிடம்.
ஆகவே மீண்டும் ஜுன் 14 அன்று போராட்டம் துவங்கியது.சட்டசபை வேறு கூடிவிட்டது. இதற்கு தான் சமயம் பார்த்து கொண்டு இருந்தோம். இரவு பகலாக கஞ்சி இல்லாமல் "காத்திருக்கும்"போர் .ரிப்பன் மாளிகை யில் உள்ளிருப்பு போராட்டம். நேற்று நள்ளிரவு வெற்றியோடு நிறைவடைந்து.NMR தொழிலாளர்கள் 908 பேர் நிரந்தரம் பெற்றனர். இந்த 'நிரந்தரம்' வார்த்தையாக வாசித்து கடந்து விட கூடாது. அது அவர்களது ஜீவன், இதுகால் ஒட்டி கொண்டு இருந்த அவமானம் அழிக்க பட்டது என அர்த்தம். மீதியுள்ள அத்தகூலிகளாக ரூ.100க்கும், ரூ.200க்கும் கூலிஅடிமைகளாக ஊர் மவுசு பேசும்"ஒப்பந்தக்கார்"களிடமிருந்தும் விடுதலை. கூலி ரூ.348 முதல் 500வரை மாநகராட்சியே நேரடியாக வழங்க ஏற்பாடாகியுள்ளது.
இதற்கு தலைமை தாங்கி- அவர்களில் ஒருவராய் ஆகிப்போன தோழர். எல்.சுந்தர் ராஜன். இப்ப இவர்தான் சிபிஎம் வ.சென்னை மாவட்ட செயலாளர். சிஐடியூ-வில் இவரது களம் இந்த பாவபட்ட கூலிகளே. இவரோடு தோழர்கள். சீனிவாசலு,டி.ராஜன், ஜி.முனுசாமி,வி.சரவணன் என இந்த சிங்காரவேலரின் வாரிசு பட்டியல் நீளும். இவர்களை எப்படி பாராட்டுவது-வார்த்தைகள் இல்லை என்னிடம்.
முகநூல் நண்பர்களின் ரசனைகள் குறித்து ரெம்ப தெரியாது. இதுவே எமது மார்க்கமென மார்பு தட்டி கொண்டாட யாராவது என்னோடு வந்தால் போதும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக